தூத்துக்குடி மாநகராட்சி அனைத்து பகுதிகளிலும் மே மாதத்தில் முழுமையான பணிகள் நிறைவடையும் என தெற்கு மண்டல குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பொய்யசாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டம் ஓவ்வொரு புதன்கிழமைகளில் மண்டல அலுவலகத்தில் அப்பகுதிக்குட்பட்ட பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் இக்கூட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட ஜெ.எஸ்.நகாவில் உள்ள தெற்கு மண்டலம் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். ஆணையர் மதுபாலன் முன்னிலை வகித்தார். மண்டல தலைவர் வக்கீல் பாலகுருசாமி வரவேற்புரையாற்றினாா்.
கூட்டத்தில் மேயர் ஜெகன் பொய்யாசாமி பேசுகையில், தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற பின் அவரது உத்தரவிற்கிணங்க ஊராட்சி புறநகர் பகுதியில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின்படி மக்கள் குறைகேட்பு முகாம் நடைபெறுவதை போல் மாநகராட்சி பகுதியில் ஓவ்வொரு வாரமும் ஓவ்வொரு மண்டலம் பகுதியில் நடத்தப்பட்டு அந்தந்த மண்டலத்தில் நடைபெற்று வருகிறது. பிறப்பு இறப்பு சான்றிதழ் முகவரி மாற்றம் புதிய குடிநீர் இணைப்பு பாதாள சாக்கடை இணைப்பு கட்டிட அனுமதி உள்ளிட்ட பல்வேறு தரப்பு மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது. நான்கு மண்டலத்திலும் நடைபெறுகின்ற குறைதீா்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு 90 சதவீதம் தீர்வு காணப்பட்டுள்ளது. சாலை கால்வாய் உள்ளிட்ட சிலவற்றுக்கு மட்டும் முறைப்படுத்தி மே மாதம் முழுமையாக சாலை உள்ளிட்ட கால்வாய் வசதிகளை செய்து கொடுத்துவிடுவோம் மண்டலத்தில் ஆரம்பத்தில் 121 112 88 101 என மனுக்கள் வாங்கப்பட்டு இதுவரை 512 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 432 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 80 மனுக்கள் மேலே குறிப்பிட்டுள்ள வகையில் உள்ளது. மக்கள் மனு கொடுப்பதில் சற்று குறைவு ஏற்பட்டதில் மகிழ்ச்சியடைகிறேன். காரணம் அந்த அளவிற்கு பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு கண்டுள்ளோம் இந்த பகுதி ஊராட்சியாக இணைக்கப்பட்ட பகுதி விவசாயம் சார்ந்தததாக உள்ளது. புதிய பூங்காக்கள் வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டதிற்கிணங்க ஆண் பெண் என இருவக்குமே தனித்தனி பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதே போல் திருச்செந்தூர் கோவில் செல்லும் பாதசாரி பக்தர்களுக்கு ஓய்வு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியை சுற்றி டைடல் பாா்க் உள்ளது. மரக்கன்றுகள் நடப்பு மாவட்டத்தில் நினைவு சின்னங்கள் மூலம் எதிர்கால தலைமுறையினருக்கு ஏற்ற வாறு பணிகள் செய்துள்ளோம் முள்ளக்காடு வரை மாநகராட்சி பகுதி என்பதால் எங்கள் பணியும் நடைபெற்றுள்ளது. ஹைவேஸ் சார்பிலும் சாலைப்பணி நடைபெற்றது. ஏற்கனவே மாநகராட்சி பகுதியில் பல போராட்ட பணிகள் நடைபெற்றதால் புதிய குடியிருப்புகள் வந்துள்ளன. அதற்கேற்றாற் போல் ஏற்கனவே 2900 புதிய மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 2ம் கட்டமாக 2100 மின்விளக்குகள் அமைக்கப்படவுள்ளது. உள்ளாட்சி துறை அமைச்சர் ஓதுக்கிய நிதியில் முழுமையாக பணிகளை செய்துள்ளோம். அடுத்தக்கட்டநிதியில் கோடை மழை முடிவு பெற்றதும் கணக்கீட பட்டு அனைத்து சாலைகளையும் முறையாக செய்து கொடுப்போம். வியாபாயரிகளின் கோரிக்கைகளையும் நாங்கள் நிறைவேற்றி கொடுத்துள்ளோம் தயவு செய்து கேரிபேக் பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யாமல் இருங்கள். மக்களும் அதை பயன்படுத்த வேண்டாம்.. சுகாதாரத்தை பேணி பாதுகாக்கும் வகையில் அனைத்து பகுதிகளுக்கும் பணியாள்கள் மூலம் நல்லமுறையில் சேகரிக்கப்படுகிறது.. குடிதண்ணீரும் சீராக வழங்கப்படுகிறது. இந்த பகுதியில் புதிய நடைபயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அனைவருடைய ஓத்துழைப்பும் அவசியம் என்று மேயர் ஜெகன் பெரியசாமி பேசினாா்.
மாநகராட்சி நிா்வாகம் கேட்டுக்கொண்ட படி பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்தையும் செய்து கொடுத்துள்ளதால் மூடப்பட்டுள்ள ஓட்டல் திறப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்றும் மனு அளித்தனர்.
நிகழ்ச்சியில் இணை ஆணையர் சரவணக்குமாா், உதவி ஆணையர் கல்யாணசுந்தரம், உதவி பொறியாளர் சரவணன், நகர அமைப்பு திட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன், நகரநல அலுவலர் சரோஜா, இளநிலை பொறியாளர் செல்வம், சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியநாதன், குழாய் ஆய்வாளர்கள் நிக்சன், பேடிக், வருவாய் அலுவலர் ஆறுமுகம், கவுன்சிலர்கள் சரவணக்குமார், பட்சிராஜ், ராஜேந்திரன், வைதேகி, முத்துமாயி, விஜயகுமார், ராஜதுரை, வட்டச்செயலாளர் பிரசாந்த், திமுக தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் விஜயகுமார், வாத்தகாக்களின் வியாபாரிகள் சங்க தலைவர் தெர்மல்ராஜா,
போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பா, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையின் நேர்முக உதவியாளர் துரைமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.