சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை - தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
தூத்துக்குடி திருச்செந்தூர்
By Mervin on | 2025-04-24 08:56:48
சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை - தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

திருச்செந்தூர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 15,000/- அபராதம் விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் திருச்செந்தூர் நடுநாலு மூலை கிணறு பகுதியைச் சேர்ந்த குன்னி மலையான் மகன் அருள் செல்வம் (25/2025) என்பவரை திருச்செந்தூர்  காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த  கனம் நீதிபதி சுரேஷ் நேற்று  (23.04.2025) குற்றவாளியான அருள் செல்வத்திற்குஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 15,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேமா, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலட்சுமி விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் பரணி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.




Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE